பணக்கார மனைவியின் ஏழைக் கணவர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார் டி.கே. ரங்கராஜன். இவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில் தன் கைவசம் இருக்கும் தொகை வெறும் 700 ரூபாய்தான் என்றும் வங்கிக் கணக்கிலும் சிறிதளவு மட்டுமே உள்ளது என்றும் கணக்கு கொடுத்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி பெயரில் 20 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துகள் இருப்பதாக பட்டியலிட்டுள்ளார்.
முழுநேர அரசியல்வாதியான ரங்கராஜன் இதுவரை எம்எல்ஏ, எம்பி பதவிகள் வகித்ததில்லை. சிலமுறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். அவரது மனைவி என்ன செய்கிறார் என்றும் தெரியவில்லை.
ஆனால் அவரிடம் 90 பவுன் தங்கமும், ஒன்றரை கிலோ வெள்ளியும், வங்கிகளிலம் பல ஆயிரங்களும் உள்ளன. பணக்கார மனைவி ஏழைக் கணவர். என்னே வினோதம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment