Monday, December 24, 2007

கருணாநிதியின் வக்காளத்து

தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி அதை பெருமையாக போற்றிப் பேசி பெருமைப்பட்டுக் கொள்வதும், தோல்வி அடைந்த கட்சி அதை சமாளிக்கும் வகையில் பேசிக் கொள்வதும் இயல்புதான்.

குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ள போதிலும் முன்பு இருந்ததை விட அக்கட்சி குறைவான இடங்களையே பெற்றுள்ளது. எனினும் அறுதிப் பெரும்பான்மையை அக்கட்சி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கப்பட்டது போலவே தோல்வியை சந்தித்துள்ள போதிலும் கடந்த தேர்தலில் பெற்றதைவிட 8 இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளது.

அக்கட்சியும் தோல்வியை ஒப்புக் கொள்வதாக கூறியிருப்பதுடன் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியும் பிரதமர் மன்மோகன் சிங்கும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதியோ, காங்கிரஸ் கட்சிக்கு வக்காளத்து வாங்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். முந்தைய தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதை பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத் தேர்தலில் குறைவான இடங்களைப் பெற்றால் உடனே சதவிகித கணக்கை காட்டுவதும், அதிக இடங்கள் கிடைத்தால் உடனே வெற்றி என்று பெருமிதப்படுவதும் திராவிடக் கட்சிகளுக்கே கைவந்த கலை. அதைத் தொன் தற்போது காங்கிரஸ் கட்சி விஷயத்திலும் கருணாநிதி கையாண்டு இருக்கிறார்.

No comments: