Sunday, December 16, 2007

விவசாயிகளுக்கு கலாம் கோரிக்கை

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்காக விளைநிலங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
.
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அவசியம் என்ற போதிலும், அவற்றுக்காக விவசாயிகளிடமிருந்து நிலங்களை விலைக்கு வாங்குவதை விட அந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களில் விவசாயிகளை பங்குதாரர்களாக ஆக்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சொந்த நிலம் இல்லாமல் எந்த விவசாயியும் இருக்கக் கூடாது என தாம் விரும்புவதாகவும், தாமும் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்திருப்பதாகவும் கலாம் கூறினார்.

புனேவில் 120 விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு அடிப்படை கட்டுமான திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதை உதாரணமாக சுட்டிக்காட்டிய கலாம் இதை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார்.

No comments: